எனை மாற்றும் காதலே…!!! அத்தியாயம் #16 & 17

அம்மு யோகாவுக்கு என்னாச்சு? ஏன் பதிவுகள் சரியான இடைவெளியில் வருவதில்லைன்னு நீங்க நினைக்கிறது புரியுது தோழமைகளே. பொதுவாகவே இதுநாள் வரை நாங்க எங்க சொந்த விஷயங்களை பொதுவெளியில் பகிர்ந்துகொண்டதில்லை. இப்போ உங்ககூட பகிர்ந்துக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறதால தான் சொல்றேன். நாங்க அம்மு, யோகான்னு ரெண்டு பேர்ங்கிறது உங்களுக்கு தெரியும்ன்னு நம்புறேன். வழக்கமா பதிவுகள் கொடுக்கிறது அம்முவாகிய நான் தான். என்னோட வசிப்பிடம் சிங்கபூர்ங்கிறது உங்கள்ள சிலருக்கு தெரிஞ்சிருக்கலாம். https://drive.google.com/file/d/1JyEsmbIWe8M3X0NFjJQ0bJfP7yB37LoM/view?usp=sharing

எனை மாற்றும் காதலே…!!!அத்தியாயம் # 12 & 13

காலை வணக்கம் தோழமைகளே… தாமதத்திற்கு மன்னிக்கவும். எங்கள் ஊரில் திருவிழா நடப்பதால் வேலை பளு மற்றும் கொண்டாட்டங்களின் காரணமாய் சரிவர பதிவுகள் கொடுக்க முடியவில்லை. நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயம் பதிவுகள் கொடுக்க முயற்சிக்கிறேன். இன்று உங்களுக்காக எனை மாற்றும் காதலே…!!! அத்தியாயம் # 12 & 13 பதிவேற்றம் செய்துள்ளேன். படிக்க கீழே இருக்கும் சுட்டியை சொடுக்குங்கள். https://drive.google.com/file/d/1QgTiISP7mlEQBW2QzoodhZgK_McUG1NR/view?usp=sharing

எனை மாற்றும் காதலே…!!!அத்தியாயம் #11

சூர்யா சௌமியின் வீட்டருகே வரும்போதே வீட்டின் முன்புறம் நின்றிருந்த நால்வரில் ஒருவன் கார் கதவருகே வந்து ஜன்னலை தட்ட, மெல்ல கண்ணாடியை இறக்கிய சூர்யா,“என்ன?” மிடுக்காய் கேட்க,“யாரு சார் நீங்க? இந்நேரத்தில் இங்க எதுக்கு போறீங்க?” என விசாரிக்க,“நான் தொழிலதிபர் பரமசிவத்தோட பையன். இந்த வீட்டு பெண்ணை பார்க்கப் போறேன். நீங்க யாரு? இதையெல்லாம் நீங்க ஏன் கேட்கறீங்க?” என்றவனிடம் கோபம் மிளிர்ந்தது. https://drive.google.com/file/d/1s8PvoVoM1Ei4BbHxMh6LS9FO1T2XadWU/view?usp=sharing

எனை மாற்றும் காதலே…!!!அத்தியாயம் #9 &10

“சந்தோஷும், சரண்யாவும் நான் இல்லாம தூங்கமாட்டாங்க…” “சந்தோஷுக்கு வேணும்னா எதுவும் தெரியாம இருக்கலாம். ஆனா சரண்யாவுக்கு இன்றைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட்டுன்னு தெரியும். சின்ன பாப்பாவே, குட்டி பையனை சமாதானம் செய்திருக்கும். நீ தேவையில்லாம யோசிக்காதே” என பதில் கொடுக்க, அவளுக்கு பற்றிக் கொண்டு வர, “லூசாப்பா நீ? நான் தான் உன்னைய பிடிக்கலைன்னு சொல்றேன்ல, விட்டுத் தொலைக்காம வம்பு பண்ற…” சண்டைக்கோழியாய் சிலிர்த்தவளின் அருகே வர, https://drive.google.com/file/d/1kwbNa56prEJVM9DFS1aP6qj_nQUubn5m/view?usp=sharing

எனை மாற்றும் காதலே…!!! அத்தியாயம் # 8

காலை வணக்கம் தோழமைகளே… தவிர்க்க முடியாத சொந்த காரணங்களால் பதிவு கொடுக்க முடியவில்லை, மன்னிக்கவும். எனை மாற்றும் காதலே…!!! அத்தியாயம் # 8 பதிவேற்றம் செய்துவிட்டேன். படிக்க கீழே இருக்கும் சுட்டியை சொடுக்குங்கள். நன்றிகள் பல. https://drive.google.com/file/d/1NVH9I4CuhhXmn36LK8MxZwD0Xa1gni08/view?usp=sharing

எனை மாற்றும் காதலே…!!! அத்தியாயம் #7

அனைவரும் அதிர்ந்து நிமிர, அங்கே பத்திரத்தில் கையெழுத்து வாங்க வந்திருந்த சத்யா ஆபத்பாந்தவனாய் மாறி உக்கிர முறைப்புடன் நின்றான். “அங்கிள்!” எனும் கூவலுடன் சந்தோஷ் அவனிடம் ஓட, “பயப்படாத குட்டி பையா! நான் இருக்கேன்…” என்றபடி சின்னவனை தூக்கிக்கொள்ள, சரண்யாவுக்கு மட்டுமல்ல சௌமியாவுக்குமே பயம் போய் பெரும் நிம்மதி வந்தது. “சத்யா! நீ இதுல தலையிடாத! உனக்கும் எனக்கும் பேச்சில்லை!” பூச்சட்டைக்காரன் உறும… https://drive.google.com/file/d/1ASHyEewB6slLBWHBBn40UEEY0bD0f35i/view?usp=sharing

எனை மாற்றும் காதலே…!!!அத்தியாயம் #6

“சத்யமூர்த்தி ஐயாகிட்ட தானே எங்க அப்பா கடன் வாங்கினாங்க…?” “ஏதே!? உங்கப்பா எங்கிட்ட தான் கடன் வாங்கினார்.” மிரட்டலாய் சொன்னான். “இல்ல, இல்ல! சத்யமூர்த்தின்னு தெளிவா எழுதி வச்சிருந்தாங்க. நான் நம்பமாட்டேன். என்னோட பேசும்போது உங்க பேர் சாயான்னு தான் சொன்னீங்க…” “சாயா வா? ஹேய்! நான் சத்யான்னு தான் சொன்னேன். நான் தான் சத்தியமூர்த்தி! தி கிரேட் கிங் மேக்கர் சத்யமூர்த்தி!” என்றபடி தன் மீசையை இரு கைகளாலும் முறுக்கி மேலேற்றிவிட்டான். https://drive.google.com/file/d/1Jh0WoSpaxiJwtq6ugL9zXdnTd2853IfE/view?usp=sharing

எனை மாற்றும் காதலே…!!!அத்தியாயம் #5

சத்யமூர்த்தி தனது வலது கையான சபாபதிக்கு அழைத்தான்.‘என்னடா இது!? அண்ணன் இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டார். மந்திரி யாராவது மண்டையை போட்டுட்டாங்களா? இல்ல ஆட்சி மாற்றம் வரப் போகுதா? ஏதோ பெருசா நடந்திருக்கு இல்லன்னா அண்ணன் இப்படி விடிஞ்சும் விடியோ பொழுதில் எழுந்திரிக்க வாய்ப்பேயில்லை.’ என யோசித்தபடி,“என்ன ண்ணா…?” என கேட்க,“என்ன நொண்ண ணா? உங்க வேலையை கூட உருப்படியா பார்க்கா முடியாம மிதந்துகிட்டு இருக்கீங்களா?” சீறலாய் வந்து விழுந்தன வார்த்தைகள். https://drive.google.com/file/d/1gCa7tLl9zfa9wqDbp_6h9GQ4OL_FKz15/view?usp=sharing

எனை மாற்றும் காதலே…அத்தியாயம் #4

“கந்துவட்டியா? அப்போ வீட்டை எழுதி வாங்காம விடமாட்டானே கடங்காரப்பய!” தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டார் பெரியவர். தர்மன் பெற்ற செல்வங்களும் அதே நிலையில் தான் இருந்தனர். “நீங்களே இப்படி அசந்து போயிட்டா எப்படி?” “என்னை என்னய்யா பண்ணச் சொல்ற? கந்துவட்டிக்காரன் கிட்ட சகவாசம் வச்சுக்கிட்டா குலநாசம்னு தெரியாதா? உசுரை கூட விட மாட்டாங்களே…” என்று அவர் உணர்ச்சிவசப்பட்டு கத்த, சரண்யாவும், சந்தோஷும் பயந்து போனார்கள். “நீங்க தான் ஏதாவது….” “எனக்கு ஏற்கனவே நெஞ்சு வலி இருக்கு… இதுலContinue reading “எனை மாற்றும் காதலே…அத்தியாயம் #4”

எனை மாற்றும் காதலே…!!! அத்தியாயம் #3

“மகிழ்வகம்” மூன்று ஏக்கர் நிலப்பரப்பின் முற்பகுதியில் தேர்ந்த ஓவியரின் கலைநயம் மிகுந்த கற்பனைக்கு கல்லில் வார்க்கப்பட்ட சான்றாய் வீற்றிருக்கும் குட்டி அரண்மனை. இதன் உரிமையாளர் தொழிலதிபர் தர்மராஜ். அவரது மனைவி தனலெட்சுமி தான் இவ்வீட்டிற்கு இப்படி ஒரு பெயரை சூட்டினார். அதற்கான முக்கிய காரணம் இதில் வசிக்கும் தாங்கள் மட்டுமல்ல இங்கு வரும் ஒவ்வொருவருமே மகிழ்வோடு இருக்க வேண்டும் எனும் எண்ணம் தான். https://drive.google.com/file/d/1XJohYdWb2vma9tXRwEMlAUhVyKBtyUXb/view?usp=sharing